/// சென்னை: கொரோனா தொற்றை ஒழிப்பதில் தோல்வியடைந்த அரசுக்கு எதிராக நாளை ( மே 7ம் தேதி ) அவரவர் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ///
இது அப்பட்டமாக பிரதமர் மோடியைக் காப்பி அடிக்கும் செயல். பேசாம உருப்படியா வேற ஏதாவது செய்யலாம்.
சில யோசனைகள்.
1. வீட்டு வாசல்ல நின்று கரோனா ஒழிகன்னு கத்தலாம். அப்படியே கரோனா கொடும்பாவி எரிக்கலாம். (புடிக்காத சட்ட நகலை எரிக்கிற மாதிரி) பேப்பர்ல கரோனான்னு எழுதி அதைக் கொளுத்தலாம்.
2. பக்கத்துல இருக்கற ரயில்வே தண்டவாளத்துல போய் தலைய வச்சி படுத்துக்கலாம். வேணும்னா பக்கத்துல கல்லக்குடின்னு ஒரு போர்டு எழுதி வக்சிக்கலாம். கவலையே கிடையாது, ரயில்கள் ஓடலையே.
3. கரோனா திணிப்பு எதிர்ப்பு போராட்டம்னு ஒண்ணு அறிவிச்சிடலாம். இது எப்படி பண்ணலாம்னா, வூட்ல இருக்கற தலையணையை எல்லாம் சாயந்திரம் ஆறு மணிக்கு மேல வெளிய எடுத்துனு வந்து அதுல திணிச்சிருக்கற பஞ்சை எல்லாம் வெளில எடுத்து வீசி சிம்பாலிக்கா எதிர்ப்பைக் காட்டலாம். இதையே இன்னும் தீவிரமா பண்ணனும்னா, மெத்தையில திணிச்சிருக்கறதக் கூட வெளில வீசி போராடலாம். பயங்கரமா இருக்கும். எல்லா ஓட்டும் உங்களுக்கு கிடைச்சி முதல்வராயிடலாம்.
4. ஆட்சிக்கு வந்தால் கரோனாவை ஒழிப்போம்னு இப்பவே வாக்குறுதி கொடுத்துடுங்க. ஒங்க டீவில எல்லாம், உதயசூரியன் உதயமாகும் போது கரோனா கருகி ஒழியிற மாதிரி கிராபிக்ஸ் பண்ணி திரும்பத் திரும்ப ஓட விடுங்க, பாத்துட்டு கரோனா செத்துடும்.
5. ஊரடங்கா இருக்கறதால, நடைப்பயணம் போக முடியாது. அதனால இருந்த இடத்திலேயே மார்ச் பண்ணி நடைப்பயணம் செய்யலாம்.
தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.