தில்லி, ஆக., 23 : இந்தியாவில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் உள்ள 2.49 கோடி பயன்படுத்தாத கணக்குகளில் சுமார் ரூ.752 கோடி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தனை நாளாக இதையெல்லாம் எப்படி விட்டு வைத்தார்கள். ஒரு வேளை ஸ்வாஹா செய்தது போக மீதியாக இருக்கும். ஒரு மணியார்டர் அனுப்பினாலே ஒழுங்காக போய்ச் சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு, இதில் இதெல்லாம் தப்பி மீந்ததாக இருக்கும்.
சிவகாசி, ஆக23: இந்தியாவிற்கு கடந்த இருவருடங்களாக சீனநாட்டின் பட்டாசு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பல நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை அதிபர்கள் புகார் கூறியுள்ளனர்.
இரண்டு வருடங்களாகவா? அப்பட்டமான பச்சைப் புளுகு. குறைந்தது ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு மேலாக இது நடக்கிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால் பிரபல சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் சீனப் பட்டாசுகளை இறக்குமதியாளர்களிடம் வாங்கி (அல்லது நேரடியாக பினாமிகள் மூலம் வாங்கி) உடல் நோகாமல் காசு பார்த்தார்கள். விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினை என்று பல சிக்கல்களில் இருந்தவர்களுக்கு இது கொழுத்த லாபகரமாகவே இருந்தது இது. இதில் சில பெரும் உற்பத்தியாளர்களும் அடங்குவர். என்ன காரணத்தாலோ தெரியவில்லை, இம்மாதிரி ஆலை அதிபர்கள் புகார் செய்துள்ளனர். ஒருவேளை இவர்களின் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏதாவது பூசல் வந்திருக்கும். அல்லது வருமானம் குறைவாகப் பெற்ற ஆலை அதிபர்கள் ஒரு பிரிவாக ஒதுங்கி புகார் செய்கிறார்கள் போலும்.
இது குறித்து 2008 மார்ச் மாதம் நான் எழுதிய பதிவு ஒன்றிலேயே சீனப்பட்டாசு இறக்குமதியாவது குறித்து சொல்லியிருந்தேன்.
https://kirumi.wordpress.com/2008/03/29/38/
இரண்டு வருடங்களாக மட்டும் இறக்குமதி ஆவதாகச் சொல்லி இருப்பது, இவர்களின் கடந்த கால திருட்டுத்தனங்களை மறைப்பதற்காக மட்டுமே இருக்கும்.
அமெரிக்க பத்திரிகை போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலி்ல், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளார்.
காரித்துப்பிக் கொள்ளவேண்டிய விசயம்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணமான பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்ட்டை நடத்தவிட மாட்டோம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இது மட்டும் நடந்து விட்டால், அதை விடப் பெரிய மகிழ்ச்சி எதுவுமிராது.
ஈரோடு : மஞ்சள் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வைகோ அழைப்பு
அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். அனைத்து விவசாயிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.
கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?
விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்வதை இன்றைய சூழலில் ஒரு புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் ஏன் வர வேண்டும்? இதிலும் அரசியலை நுழைத்து கொள்ளையடிக்கவா? விவசாயிகள் செய்வது வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட கதையாகாமல் இருந்தால் சரி.