கிருமி

16/12/2011

முத்தூத் மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர் குழுமங்கள் புறக்கணிக்குமா?

புது தில்லி, டிச.1: சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தூ.  எய்ட்ஸ் நோயாளிகள் உருவாவதை தடுக்க வழி காணாமல், ஒதுக்கப்படுபவர்களுக்கு பரிந்து பேசுகிறார்கள். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் என்பது எதற்கும் பொருந்தும். அதை எதிலும் கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் நாம் மட்டுமே.

சென்னை,டிச.16: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், அண்ணா ஹசாரே சென்னைக்கு வருகிறார்.

கிழிஞ்சது. இனி ஊரெல்லாம் வரவேற்பு தட்டி வச்சி கூத்தடிப்பாங்க. திருந்தவே மாட்டாய்ங்க, இவிங்க.

போடி, டிச. 16: கேரளத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி
விரட்டியடிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி போடி, தேவாரம் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

இன்று காலை தேனியில் உள்ள கேரள மாநிலத்தவருக்குச் சொந்தமான தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள தங்களின் நகைகளை மீட்கப் போவதாகக் கூறி, அடகுவைத்தவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டங்களை விட மலையாளிகளின் நிறுவனங்களை புறக்கணித்தால் பயனிருக்கும். செய்வார்களா நம்மவர்கள்?.

  • மொத்தமாக நகைகளை எப்பாடு பட்டும் திருப்பட்டும், முத்தூத் மணப்புரங்களிலிருந்து.
  • முத்தூத், மணப்புரம் விளம்பரங்களை சன், கலைஞர், ஜெயா தொலைகாட்சிக் குழுமங்கள் புறக்கணிக்குமா?
  • மலையாளிகளுக்கு இடம் கொடுத்தவர்கள், அவர்களை காலி செய்யச் சொல்லலாம்.
  • மலையாள திரைப்படங்களை ஓட்டாது புறக்கணிக்கலாம்.
  • மலையாள நடிகர்களையும் பாடகர்களையும் இன்ன பிற மலையாளிகளையும், தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கட்டும்.

நம்மவர்களை அடித்து விரட்டும் போது அப்படி அடித்து விரட்டினாலும் தவறில்லை, இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடில்லாமல் இருக்க வேண்டாம் என்று நினைத்தால் இவ்வாறான புறக்கணிப்புகள் பலன் தரக்கூடும்.

இப்படிப்பட்ட புறக்கணிப்புகளுக்கு அறைகூவல் விடுக்க எந்த கட்சியாவது, அமைப்பாவது ஆயத்தமாகி இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், இவர்களுக்கு பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் இருக்காது, பிரச்சினையால் விளம்பரமும், பெயரும், ஆதாயமும் தேடுவதில் தான் இவர்களுக்கு கவனம் செல்லும்.

புதுதில்லி, டிச.16: பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சச்சின் ஒரு விளையாட்டுக்காரர். பெரும் பண முதலைகள் பணம் குவிக்க உதவும் ஒரு வெட்டி விளையாட்டின் பிரதான ஆட்டக்காரர்களில் ஒருவர். இதனால் நாட்டுக்கு என்ன
பயன் கிடைத்தது? சச்சின் சம்பாதித்தது ஒரு புறம், வருமான வரி ஏய்ப்பு முயற்சி,  இறக்குமதி வாகனத்துக்கு வரி ஏய்ப்பு முயற்சி என்று குற்றச்சாட்டுகள்.

உலகின் இரண்டாவது பெரும் மக்கட்தொகை கொண்ட நாட்டிற்கு ஒலிம்பிக் பந்தயங்களில் என்ன, எத்தனை பதக்கங்கள் கிடைத்தன, நாட்டின் மானம் அங்கு கப்பலேறியது. இங்கு சச்சினுக்கு தேசத்தின் உயரிய விருது கிடைக்க சட்டத்தையும் வளைப்பார்கள், ஏனென்றால் நம் நாட்டுக்கே பணப்பேய் பிடித்திருக்கிறது.

Create a free website or blog at WordPress.com.